Friday, May 13, 2016

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2014

பல நூறு வார்த்தைகள் .....பல நூறு உறவுகள் ....பல நூறு உணர்ச்சிகள் ....
அன்றாடம் நம் வாழ்வில் வந்து போனாலும் ...
நாம் பிறந்த நொடியில் இருந்து
இன்று வரை நம் உணர்வோடு, உறவோடு , வார்த்தையாய்..வாக்கியமாய் ...
நம் ரத்தத்தில் கலந்து விட்ட " அம்மா " என்ற உறவுக்கு 
பெயராக மட்டும் இல்லாமல் .....அர்த்தமாய் வாழும்
இந்த பூமியில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ...
இந்த நாள் உங்கள் இனிய நாளாகும் !
இந்த நாளின் பெருமையை உணர்த்திய என் தாய்க்கும் .....
இந்த நாளின் வாழ்த்தை எனக்கும் உரியதாக்கிய என் செல்வங்களுக்கும் ....
என் நன்றி !


No comments:

Post a Comment