Thursday, April 14, 2016

விமான நிலையம் !

விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை
பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !
எது வரை ?


உல்லாச பயணம் தவிர ...உன் வேலை நிமித்தம்
நீ அயல்நாடு செல்லும் வரை …
உன் கால்கள் என்று அயல் மண்ணை மிதிக்க
உன் மண்ணை விட்டு பிரிகின்றதோ ????
அந்த நாள் உன் வாழ்வில் வரும் வரை ….


ஐயோ !!! அன்று தெரியும் அந்த விமான நிலையம் ஒரு
முகம் தெரியா எதிரி என்று !
உன்னை …. உன் உரிமைகளை உனக்கே தெரியாமல்
உள் வாங்கி …….சிரித்து வரவேற்று ….உன்
உயிரை வேரோடு அறுத்து எரியும் வலி !


வளர்த்த உயிர்களை …..
வளர்ந்த மண்ணை …
பற்றி பழகிய தோழர்களை ….
எட்டி முறைத்த எதிரிகளை …
விட்டு செல்லும் அந்த தருணம் !


வயிற்றுக்கும் , தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளதடீ !!
என்ற சினிமா வரிகளின் அர்த்தம் புரிந்த தருணம்  !
ஆயிரம் வார்த்தைகள் நம் மொழிகளில் தெரிந்தும் ….
கண்ணீர் மட்டுமே பேசும் தருணம் !


பிரிவென்றால் ….
காதலன் , காதலிக்கு மட்டும் அல்ல …
அனைத்து உறவுகளின் பிரிவிக்கும் ….
வலி உண்டு என புரிய வரும் ..
நம் உறவுகளுக்கு கை அசைக்கும் தருணம் !


விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை

பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !

No comments:

Post a Comment