விடியுமா என சில நாள் இருக்க
முடியுமா என சில நாள் இருக்க
விடிந்தாலும் ... முடிந்தாலும்
நினைவில் நிற்கும் சில நாள்
இன்று அந்த ஒரு நாள்
ஆட்டமோ .. பாட்டோ
அது தமிழில் என்றால் ..
கேட்பது என் காது இல்லை .. உள்ளம்
வற்றாத தமிழ் தாகத்திற்கு
நீருற்றி செல்லும் ஒரு நாள்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா ...
என்ற வார்த்தைகள் காதில் எட்டி
பெருமை பட வைக்கும் ஒரு நாள் ...
தமிழ் வாழ்க ! தமிழர் வளர்க ! தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு
மூச்சும் , முயற்சியும் வாழ்க !
No comments:
Post a Comment