என் திருமணம் முடிந்து
பத்து ஆண்டு காலம் ஆகிவிட்டதா ??????
நம்ப முடியவில்லை ...வில்லை ...வில்லை !!!!
10 வருட காலங்கள் ....
மணம் செய்ய மனம் கூடி பேசிய
இருவர் தந்தையும் திருவடி சேர்ந்தனர் !!
குலம் வாழ வாழ்த்தி நின்ற
இருவர் அன்னையரும் இந்தியாவில் வாழ்கின்றனர் !
எங்களின் திருமணத்தை
தங்களின் திருவிழாவாய்...மகிழ்ந்த
உடன் பிறந்தவர்களும்
தொலை தூரத்தில் நின்று
தொலைபேசியில் வாழ்த்து கூற .....
அன்னை தந்தை தான் உலகம் என சுற்றிய காலங்கள் சில ...
அண்ணனும் ,அக்காவும் தான் உறவு என எண்ணிய எண்ணங்கள் பல ....
ரத்த பந்தத்தின் ...
பாசம் சொல்லில் அடங்காதவை !!!
ஏட்டில் எழுதாதவை !!
மனதில் என்றும் மறையாதவை !!
இத்தனை இத்தனை உறவுகள்
எத்தனை எத்தனை நினைவுகள் ..
இன்று ...
காலங்கள் மாறியதை மனம் உணர்கிறது !!
.. வாழும் உறவுகள் ஒருபுறம் இருக்க ..
என்னகென்ன ..நீயும்
உனக்கென்ன நானும்
நமக்கென்ன இரு கண்கள் !!!
நம் வாழ்வின் ஒவ்வொரு விடியலும்
வானில் உதிக்கும் சூரியனால் மட்டும் இல்லை ...
நம் இரு கண்களில் மின்னும் ஒளியினாலும் !!!
கடவுள் குடுத்த கண்களால்
உலகை காண .....
நாம் படைத்த இரு கண்களால்
வாழ்வை ரசிக்கிறோம் !!!!
இன்று போல் என்றும்
இந்த அன்பு மாறாமல்
இருக்க உனக்கு நானும்
எனக்கு நீயும்
வாழ்த்தை வார்த்தையால் சொல்லாமல்
வாழ்க்கையாய் வாழ்வோம் என சொல்லி
என்னால் உனக்கு குடுக்க முடிந்த பரிசு
என் மனதோடு நிற்கும் என் தமிழ் வார்த்தைகளே !!!!!