Saturday, February 25, 2012

கணவனின் அன்பு !

என் கண்களில் வழியும்
நீரை துடைப்பதில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு !

அதற்கு காரணமாய் நீ இல்லாமல்
இருப்பதே !!

அமெரிக்காவில் தீபாவளி !

தீபங்கள் ஏற்றும் தீப திருநாளில் ...
புத்தாடை அணிந்து
மத்தாப்பு கொளுத்தி
தெருவினில் ஓடி
வெடி வெடித்து ...
அக்கம் பக்கம் சென்று
பலகாரம் பகிர்ந்து
மகிழ்ந்த காலங்கள்
நெஞ்சில் நிழலாய்
நிற்க !!!!
இன்று .....
தொலைவில் இருக்கும் உறவுகளுக்கு .....
தொலைபேசியில் அழைத்து
வாழ்த்து சொல்லும் போது
யாரோ தெருவில் வெடிக்கும்
வெடி சத்தமே நம் தீபாவளி ஆனது !!!
இருந்தும் மனம் என்னவோ
தீபாவளி என்ற பெயருக்கே
இத்தனை மகிழ்வை தருகிறது !!!!
அந்த மகிழ்வோடு ....
மன நிறைவோடு ....
என் அனைத்து இனிய நண்பர்களுக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!!!!!!!

செதுக்கியவனே ரசிக்கும் சிற்பங்கள் !

அதிகாலை நேரம் ...உறக்கம் இல்லை கண்ணில் ..
அருகில் இருந்த மகனையும் மகளையும்
பார்த்த சில நொடிகள் எண்ணங்கள் எங்கோ சென்றது !!
கள்ளம் கபடமின்றி உறங்கும் சின்ன சிட்டுக்கள் ..
சிறகு முளைக்க வில்லை இன்னும்
ஆனாலும் வானில் பறக்க என்னும் எண்ணங்கள் தான் எத்தனை ?
பிஞ்சு உள்ளங்களின் கனவுகள் ....
வானில் மிதக்கும் நட்சத்திர கூட்டம் போல் எண்ணிக்கை இல்லாதது ...
பல சமயம்..
என் கனவுகளையும்..
சோகங்களையும்
பாசங்களையும்
கோபங்களையும் எனக்காக தாங்கும் என் இரு தூண்கள் !!
கோபத்தில் நான் திட்டிய வார்த்தைகளுக்கு
என்னையே கட்டி பிடித்து கண்ணீர் சிந்தும்
அழகிய சிற்பங்கள் !!
"I Love you Mummy" என தினமும் ஸ்ரீ ராம ஜெயம் போல் சொல்லும்
என் இனிய பக்தர்கள் !!!
இருவரின் நெற்றியில் முத்தமிட்டு எழ முயன்ற
என் கைபிடித்து அருகில் இழுத்து
"I love you Mummy" என்ற மகளின் குரல் கேட்டு ஏனோ கண்ணீர் வந்தது !!!
வீட்டின் கீழே வந்து ஜன்னலின் வழியே ....
வானம் புதியதாய் தெரிந்தது ...
பூமி அழகாய் விரிந்தது...
மனதில் புது உற்சாகம் பிறந்தது..
இப்படியே கனவில் லயித்த என்னை
உலுக்கியது மாடியில் நான் அணைக்க மறந்த அலார சத்தம் ....
மனதில் அலறிய படி....
நான் படி ஏறி சென்ற நொடி !!!
தூக்கம் கலைந்த கோபத்தில் என் செல்ல மகள் !
"I hate you" Mummy என்றாள்...
சிரிப்பதா? கோபப்படுவதா?
என புரியாமல் ....
அவளை பார்த்து sorry செல்லம் என சொல்லிவிட்டு
அவளின் உதட்டோரம் வந்த ஒரு சின்ன புன்னகை பார்த்து
சிரித்து கொண்டே என் இனிய நாளை துவங்கினேன் !!!!!

ஒரு தாயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

இந்த நாள் ???

9 வருடங்களுக்கு முன் ....

November 10

வேதனையில் சிரிக்க கற்று தந்த நாள் ...
என் உயிரின் மதிப்பை நான் உணர்ந்த நாள் !!
முதல் முறையாக ..
என் வலியை நானே ரசித்த நாள் .....
எனக்கு வலி உயிர் போகிறது !! ..... உனக்கேன் இத்தனை கொண்டாட்டம் ???
என மற்றவரின் சிரிப்பில் மனம் கொந்தளிக்காத நாள் .......

நான் படுக்கையில் கிடக்க ..
நாலாபுறமும் ஆஸ்பத்திரி வாடை வீச ...
ஊசி என் உடம்பை துளைத்து மருந்தை ஏற்றி கொண்டிருக்க ....
எனக்கு நடந்த அறுவை சிகிச்சையின் வலியில்....
அம்மா வலிக்குது !!! என கத்த வேண்டிய நான் ...
என்னை அம்மா என்று அழைக்கும் குரல் தேடி மனம் சென்ற நாள் .....

பெற்றவள் உடனிருக்க ....
உற்றவன் துணையிருக்க .....
கண்கள் மட்டும் ....யாரையோ தேடி நிற்க ....

அதோ அங்கே.....
சின்னதொரு தூளியில் !
சிங்கார சிட்டென ..
எனக்கென்று மலர்ந்த மொட்டென ....
என் இனிய மகள் !!

கண்கள் கலங்கின ....பட்ட வலியினால் அல்ல ...
உலகின் உன்னத சொல்லான "அம்மா "
என்ற சொல்லுக்கு என்னை உரியவள் ஆக்கின
என் மகளுக்கு நான் சொன்ன நன்றியால் !!!!

ஆம் !! இந்த நாள் !!

நான் தாய் என்ற சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த நாள் !!!
என் செல்ல மகளின் பிறந்த நாள் !

நீ இன்று போல் என்றும் நலமாக வாழ வேண்டும் என்ற
என் எண்ணங்களோடு .......
என் நட்பும் , சுற்றமும் சூழ உன்னை வாழ்த்த அனைவரையும் கேட்டு கொள்கிறேன் !!!!

Friday, February 24, 2012

காதல் கவிதை

காதலித்தால் தான் கவிதை வரும்
என எண்ணியதால் ....
காதலித்தேன் !!
காதலனை அல்ல .....கவிதையை !!

காதல் கவிதைகள் பல இருக்க
இது ஒரு
கவிதை காதல் !!

என் மனம் !

என் மனம் கல் போன்றது என்றாய்
ஆம் !!
அதனால் தான் அதில் பதித்த
உன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கிறேன் !!