Thursday, February 11, 2016

என் கணவருக்காக !

என்னுள் வந்த நாள் முதல் 
இன்று வாழும்  நாள் வரை 
தனக்கென வாழ்ந்ததில்லை நீ 
எனக்கென வாழ்ந்தாயா  ? என கேட்கவில்லை 
நான் அறிவேன் நீ எனக்காக மட்டுமே சுவாசித்தாய் என 

என் சிரிப்பு உன் கனவு 
என் சோகம் உன் தவிப்பு 
உன் தியாகம் என் வாழ்க்கை 
உன் உழைப்பு என் செழிப்பு 

நீ உன் அன்பை உணர்த்தியது 
வார்த்தையாய்  அல்ல .... வாழ்க்கையாய் ! 

உன் வாழ்வின் மிக அருமையான சந்தர்ப்பம் இது 
உன் தாயின் மகனாய் , 
தோழனுக்கு தோழனாய் 
நீ வாழ்ந்த நிமிடங்களை திரும்பி பார்க்கும் ஒரு தருணம் !

எங்கிருந்தாலும் வாழ்க என பாடும் சோக கீதம் இல்லை இது 
உன் வாழ்வை சிறிது ரசித்து விட்டு...
 என்னிடமே  வா என சொல்லும் சுயநலம்  இது !

காத்திருப்போம்  உனக்காக 
நீ நலமாய் வரும் நேரம் பார்த்து