Thursday, May 19, 2016

தமிழ் வாழ்க ! தமிழர் வளர்க !

விடியுமா என சில நாள் இருக்க 
முடியுமா என சில நாள் இருக்க 
விடிந்தாலும் ... முடிந்தாலும் 
நினைவில் நிற்கும் சில நாள் 
இன்று அந்த ஒரு நாள் 

ஆட்டமோ .. பாட்டோ 
அது தமிழில் என்றால் ..
கேட்பது என் காது இல்லை .. உள்ளம் 
வற்றாத தமிழ் தாகத்திற்கு 
நீருற்றி செல்லும் ஒரு நாள் 

தமிழன் என்று சொல்லடா 
தலை நிமிர்ந்து நில்லடா ...
என்ற வார்த்தைகள் காதில் எட்டி 
பெருமை பட வைக்கும் ஒரு நாள் ... 

தமிழ் வாழ்க ! தமிழர் வளர்க  ! தமிழுக்காக எடுக்கும் ஒவ்வொரு 
மூச்சும் , முயற்சியும் வாழ்க ! 

Friday, May 13, 2016

காதல்

நேரத்திற்கும் இத்தனை சுவை என்று ...
உனக்காக காத்திருக்கும் நொடிகளில் தான் 
புரிந்து கொண்டேன் !!

நீ பார்கிறாயா என்பதற்காகவே பார்க்கிறேன்
என் கைபேசியை அதிகம் !
உன்னோடு பேசும் சில  நொடிகளுக்காகவே
யாருடனும் பேசாமல் கழிக்கிறேன் பல மணிநேரங்களை !

அன்பென்றால் வரம் என அறிவேன்
உன்னை பார்த்த பின் அது சாபமென்றும் உணர்ந்தேன் !



பிரியமானவர்களின் மௌனம் !

ஆயிரம் வார்த்தைகள் மனதில் இருந்தாலும்
மனம் விரும்பும் உறவுகளுடன்
பேசாமல் போகும் நேரம் தான் நரகம் என்றனரோ ?
நரகத்திலும் மகிழ்ச்சியாக வாழ
கற்று கொடுக்கிறது நாம் பிறர் மீது வைக்கும் அன்பானது
நரகம் சென்றாலும் வாழ கற்று தரும்
பாடம் தான் பூமியில் நாம் நேசிக்கும் உறவுகள் ! 

விமான நிலையம் -2

வாய் விட்டு சிரிக்க பல நாள் இருக்க .. 
மனம் விட்டு அழ முடியாமல் கை அசைக்கும் ஒரு நாள் இது ... 

என் வாழ்வில் ....
நான் என்றுமே விரும்பாத ஓர் இடம் 
விமான நிலையம் !
ஆனால் ...
நான் என்றுமே தவிர்க்க முடியாத ஓர் இடமும்
விமான நிலையமே !
உறவோடு விளையாடும்... நம்
உணர்வோடு விளையாடும் ஓர் இடம்
என்றென்றும் புன்னகை என வரவேற்று ...
என்றென்றும் கண்ணீரை மட்டுமே தரும்
ஒரு ராட்சத மாளிகை ..

நான் செல்கிறேன் இன்று அந்த மாளிகைக்கு
கை அசைத்து திரும்பும் நேரம் ..
மனதின் ஓரம் ..
மீண்டும் சந்திப்போம் எனும் ஒரு நம்பிக்கை மட்டுமே
மிச்சமிருக்கும் ....

நம்பிக்கை தான் வாழ்க்கை !

இன்று கை அசைத்து செல்லும் என் தாய்
மீண்டும் ..என் தேவைக்கு கை கொடுக்க வருவார்
எனும் நம்பிகையுடன் கை அசைக்கிறேன் .....

வாய் விட்டு சிரிக்க பல நாள் இருக்க ..
மனம் விட்டு அழ முடியாமல் கை அசைக்கும் ஒரு நாள் இது

அன்னையர் தினம் 2015

இன்று அன்னையர் தினம்
நான் தாய் நாட்டிலும் இல்லை
என் தாய் வீட்டிலும் இல்லை
உடன் பிறந்த சொந்தங்கள்
உலகின் ஒவ்வோர் மூலையில் சிதறி கிடக்க 
உடன் பிறவா சொந்தங்கள்
நண்பர்கள் என்ற பெயரில் உடன் இருக்க
வேகமாய் சுழலும் இந்த வாழ்க்கையிலும்
ஒரு சிறு துன்பம் என்றாலும்
தொலைபேசியிலும், மெசேஜ் லேயும்
" Is Everything ok " ? , " enna aachi " ? , "What happened " ?
என்று பதறி கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களிலும்
அன்னையை பார்க்கிறேன் !
என்னை பெற்ற தாய் ஒருவர்
வளர்த்த தாய் ஐவர்
என் தந்தையையும் சேர்த்து ...
அன்னை என்ற வார்த்தைக்கு
அன்பு என்ற அர்த்தம் என்றால் ...
என் தாயும், சகோதரிகளும்,
உன் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பவன் இல்லை நான் ....
அந்த கண்ணீருக்கு காரணமாய் நான் என்றும் இருக்க மாட்டேன் ...என்று வாழ்வில் உணர்த்தி வரும்
என் கணவரும் ,
நான் திட்டும் வார்த்தைகளுக்கு என்னையே கட்டி அழும்
என் செல்வங்களும் ,
நிதமும் என் சிரிப்பை தவிர வேறு எதையும் எதிர் பார
என் உயிர் நண்பர்களும் ..
எனக்கு அன்னையரே !!!
என்னை சுற்றி இருக்கும் அனைத்து தாய் உள்ளங்களுக்கும்
என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !!!!💐💐💐💐


அன்னையர் தின வாழ்த்துக்கள் 2014

பல நூறு வார்த்தைகள் .....பல நூறு உறவுகள் ....பல நூறு உணர்ச்சிகள் ....
அன்றாடம் நம் வாழ்வில் வந்து போனாலும் ...
நாம் பிறந்த நொடியில் இருந்து
இன்று வரை நம் உணர்வோடு, உறவோடு , வார்த்தையாய்..வாக்கியமாய் ...
நம் ரத்தத்தில் கலந்து விட்ட " அம்மா " என்ற உறவுக்கு 
பெயராக மட்டும் இல்லாமல் .....அர்த்தமாய் வாழும்
இந்த பூமியில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ...
இந்த நாள் உங்கள் இனிய நாளாகும் !
இந்த நாளின் பெருமையை உணர்த்திய என் தாய்க்கும் .....
இந்த நாளின் வாழ்த்தை எனக்கும் உரியதாக்கிய என் செல்வங்களுக்கும் ....
என் நன்றி !


Thursday, April 14, 2016

விமான நிலையம் !

விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை
பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !
எது வரை ?


உல்லாச பயணம் தவிர ...உன் வேலை நிமித்தம்
நீ அயல்நாடு செல்லும் வரை …
உன் கால்கள் என்று அயல் மண்ணை மிதிக்க
உன் மண்ணை விட்டு பிரிகின்றதோ ????
அந்த நாள் உன் வாழ்வில் வரும் வரை ….


ஐயோ !!! அன்று தெரியும் அந்த விமான நிலையம் ஒரு
முகம் தெரியா எதிரி என்று !
உன்னை …. உன் உரிமைகளை உனக்கே தெரியாமல்
உள் வாங்கி …….சிரித்து வரவேற்று ….உன்
உயிரை வேரோடு அறுத்து எரியும் வலி !


வளர்த்த உயிர்களை …..
வளர்ந்த மண்ணை …
பற்றி பழகிய தோழர்களை ….
எட்டி முறைத்த எதிரிகளை …
விட்டு செல்லும் அந்த தருணம் !


வயிற்றுக்கும் , தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளதடீ !!
என்ற சினிமா வரிகளின் அர்த்தம் புரிந்த தருணம்  !
ஆயிரம் வார்த்தைகள் நம் மொழிகளில் தெரிந்தும் ….
கண்ணீர் மட்டுமே பேசும் தருணம் !


பிரிவென்றால் ….
காதலன் , காதலிக்கு மட்டும் அல்ல …
அனைத்து உறவுகளின் பிரிவிக்கும் ….
வலி உண்டு என புரிய வரும் ..
நம் உறவுகளுக்கு கை அசைக்கும் தருணம் !


விமான நிலையம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை ..
பார்க்க விரும்பும் ஓர் இடம் !
விமானம் !
பெரியவர் முதல் சிறியவர் வரை

பயணம் செல்ல விரும்பும் ஓர் வாகனம் !