Friday, May 13, 2016

அன்னையர் தினம் 2015

இன்று அன்னையர் தினம்
நான் தாய் நாட்டிலும் இல்லை
என் தாய் வீட்டிலும் இல்லை
உடன் பிறந்த சொந்தங்கள்
உலகின் ஒவ்வோர் மூலையில் சிதறி கிடக்க 
உடன் பிறவா சொந்தங்கள்
நண்பர்கள் என்ற பெயரில் உடன் இருக்க
வேகமாய் சுழலும் இந்த வாழ்க்கையிலும்
ஒரு சிறு துன்பம் என்றாலும்
தொலைபேசியிலும், மெசேஜ் லேயும்
" Is Everything ok " ? , " enna aachi " ? , "What happened " ?
என்று பதறி கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களிலும்
அன்னையை பார்க்கிறேன் !
என்னை பெற்ற தாய் ஒருவர்
வளர்த்த தாய் ஐவர்
என் தந்தையையும் சேர்த்து ...
அன்னை என்ற வார்த்தைக்கு
அன்பு என்ற அர்த்தம் என்றால் ...
என் தாயும், சகோதரிகளும்,
உன் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பவன் இல்லை நான் ....
அந்த கண்ணீருக்கு காரணமாய் நான் என்றும் இருக்க மாட்டேன் ...என்று வாழ்வில் உணர்த்தி வரும்
என் கணவரும் ,
நான் திட்டும் வார்த்தைகளுக்கு என்னையே கட்டி அழும்
என் செல்வங்களும் ,
நிதமும் என் சிரிப்பை தவிர வேறு எதையும் எதிர் பார
என் உயிர் நண்பர்களும் ..
எனக்கு அன்னையரே !!!
என்னை சுற்றி இருக்கும் அனைத்து தாய் உள்ளங்களுக்கும்
என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !!!!💐💐💐💐


No comments:

Post a Comment